திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை - மக்களவையில் கோரிக்கை வைத்த கார்த்திக் சிதம்பரம்

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை - மக்களவையில் கோரிக்கை வைத்த கார்த்திக் சிதம்பரம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட வேண்டும் என்று மக்களவையில் சிவகங்கை மாவட்ட  எம்.பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை பொருத்த அளவில் துபாய், ஷார்ஜா, கொழும்பு, கோலாலம்பூர், சிங்கப்பூர் என வெளிநாட்டு விமான சேவைகள் நிறைய இருந்தாலும், உள்நாட்டு சேவைகளில் சென்னையை தவிர்த்து இந்தியாவின் எந்த ஒரு விமான நிலையத்திற்கும் சேவைகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. இந்த குறையை தீர்க்கும் பொருட்டு 2018 ஆம் ஆண்டு மும்பை வழியாக ஜெட் ஏர்வேஸ்  டெல்லி சேவையை வழங்கியது.

உள்நாட்டு சேவை என்றாலே சென்னை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டெல்லிக்கு விமான சேவை தொடங்க வேண்டும். சேவை தொடங்கப்படுவதனால் திருச்சி, புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். மேலும் சுற்றுலா தளங்களை பார்வையிட்டு செல்ல குறிப்பாக ஸ்ரீரங்கத்திற்கு வட மாநில பக்தர்கள் வருவதற்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn