குடிபோதையில் நண்பனுக்கு துப்பாக்கி சூடு

குடிபோதையில் நண்பனுக்கு துப்பாக்கி சூடு

திருச்சி லால்குடி அருகே செங்கரையூர் மீனவர் காலணியில் சேர்ந்த முருகேசன் மகன் பாண்டியன் வயது 23 இவரும் அதே ஊரைச் சேர்ந்த எனது நண்பர் கலியபெருமாள் மகன் சந்தோஷ்குமார் வயசு 23 இவர்கள் இருவரும்

செவ்வாய்க்கிழமை இரவு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு செங்கரையூர் கிராமத்திற்கு வந்தனர் .அப்போது பாண்டியனின் இருசக்கர வாகனத்தை திருத்துறைப்பூண்டி ஒயின்ஷாப் விட்டுவிட்டு வந்தது தொடர்பாக பாண்டியனுக்கும் சந்தோஷ்குமார் -க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் அவரது வீட்டில் இருந்த ஏர்கன் துப்பாக்கியால் சந்தோஷ் குமாரை சுட்டனர்.இதில் காயமடைந்த சந்தோஷ் குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

 இது குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision