போதையில் டீ ஸ்டால் கல்லாப்பெட்டியில் கை விட்டவர்களுக்கு திருச்சியில் அடி உதை

போதையில் டீ ஸ்டால் கல்லாப்பெட்டியில் கை விட்டவர்களுக்கு திருச்சியில் அடி உதை

திருச்சி கரூர் புறவழிச்சாலையில் அன்னை டீ ஸ்டால் என்ற டீக்கடையில் கோவிந்தராவ் 
இருந்துள்ளார்.அப்போது 2 பேர் போதையில் தகராறு செய்துள்ளனர்.பின்பு  கல்லா பெட்டியில்  கையை விட்டு 2 பேரும் தகராறில் ஈடுபட்டனர்.

இருவரையும் அன்னை டீ ஸ்டாலில் வேலையில் இருந்த கோவிந்தராவ் 
ஏன் கல்லாப்பெட்டியில் கையை விட்டு பணத்தை எடுக்கிறாய் என கேட்டுள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து  இருவரையும் கையால்
அடித்து சாலையில் உள்ள நடைமேடையில் உள்ள கம்பியில் கட்டி உட்கார வைத்திருந்தனர்.

அவர்களிடம் யார் என விசாரித்ததில் நத்தர்ஷா பள்ளிவாசல் சேர்ந்த அஜ்மத் அலி ,அபுதாஹீர் என்பது தெரிய வந்தது. காவல்துறைக்கு தகவல் கொடுத்த போது 2 பேரையும்  ரோந்து வாகன  பொறுப்பு அலுவலர் சிறப்பு உதவி ஆய்வாளர்  தங்கவேல்
உறவினரிடம் ஒப்படைத்து உள்ளார்.முகத்தில் காயம் ஏற்பட்டு இருவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn