காந்தி மார்க்கெட்டில் துரை வைகோ வாக்கு சேகரிப்பு

காந்தி மார்க்கெட்டில் துரை வைகோ வாக்கு சேகரிப்பு

திருச்சியின் புகழ்பெற்ற காந்தி மார்க்கெட்டில், இன்று காலை 8 மணியிலிருந்து பொதுமக்களிடமும், வியாபார பெருமக்களிடமும் நடந்து சென்று, தீப்பெட்டி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்து வருகிறார். திமுக கிழக்கு மாநகரச் செயலாளர் மண்டலத் தலைவர் மு.மதிவாணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக உடன் வந்து வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்கள்.

கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணியின் தோழர்கள் உடனிருந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision