திருச்சியில் (24.06.2022) அன்று வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் (24.06.2022) அன்று வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் (24.06.2022) வெள்ளிக்கிழமை அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ வேளாண்மை முடித்த 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், சுய விவரக் குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும்

இளைஞர்கள் (24.06.2022) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மட்டும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை தந்து பயன்படுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.co/nepIqeLanO