பிரபல கல்லூரி மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

பிரபல கல்லூரி மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில், பாலக்கரை மாணிக்கபுரம் தெருவைச் சேர்ந்த தீபன் (18) BA ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளம் தெருவை சேர்ந்த சங்கர் (18), திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் (18),

திண்டுக்கல் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ராகுல் (19) ( விடுதியில் தங்கி இருந்தார்), திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன் (18) ஆகியோருடன் சேர்ந்து மாணவன் தீபனும் திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது காவிரி ஆறு நீரில் தீபன் அடித்துச் செல்லப்பட்டார்.

இதை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனே இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு சக மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கண்டோண்மென்ட் தீயணைப்பு துறை வீரர்கள் ரப்பர் படகு மூலம் நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் தீபனை தேடி வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு காவிரி ஆற்றில் அடித்த சொல்லப்பட்ட மாணவன் தீபன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவன் உயிரிழந்த சம்பவம் கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision