கர்நாடக பேருந்தை மறித்து விவசாயிகள் போராட்டம் - பரபரப்பு

கர்நாடக பேருந்தை மறித்து விவசாயிகள் போராட்டம் - பரபரப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கர்நாடக பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கி பெட்ரோல், டீசல் மீத்தேன் கனிம வளங்களை கார்ப்ரேட் கம்பெனி எடுத்து சுரண்டும் நிலைக்கு தள்ளப்படும். தமிழகத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு கொடுக்கும் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி விடுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகளை சாகடிக்க துடிக்கும் கர்நாடகவிற்கு ஏன் அம்மாநில பேருந்து செல்ல வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision