உய்யகொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உய்யகொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.

திருச்சி லால்குடி நந்தியாறு திட்டங்களை செயல்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி உயர்மட்ட தடுப்பணை கட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தி, ஏரி குளங்கள் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் செழிக்க ஓராண்டில் பல நூறு கோடி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 7 பேர் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn