தந்தை பெரியார் அரசு கல்லூரி, கூடுதல் கட்டடத் திறப்பு விழா

தந்தை பெரியார் அரசு கல்லூரி, கூடுதல் கட்டடத் திறப்பு விழா

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 29.12.2022 அன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தேர்வு நெறியாளர் அலுவலகப் புதிய கூடுதல் கட்டடம் திறக்கப்பட்டது. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத் திறப்பு விழாவின்போது கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் குணசேகரன் குத்து விளக்கேற்றிச் சிறப்பு செய்தார். கல்லூரித் துணைத்தேர்வு நெறியாளர் முனைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்பு வழங்கினார். கல்லூரித் தேர்வு நெறியாளர் முனைவர் வாசுதேவன் நன்றி கூறினார்.

கட்டடப் பொறியாளர் ஐஸ்வரியா, பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா நிகழ்வுகளைத் தேர்வுநெறியாளர் அலுவலகப் பணியாகளர்கள் ஒருங்கிணைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO