காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தற்கொலை

காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காந்தலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பாலசுந்தரி (31). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் வீட்டில் அவரது தம்பி வீரமணி மற்றும் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், அதற்கு வீரமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று கூறினராம். இந்நிலையில், சற்று நேரத்தில் வீட்டினுள் பாலசுந்தரி அவருடைய சேலையிலேயே உத்தரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை திருவெறும்பூர் தாலுக்கா அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision