பூண்டு வியாபாரியை பாராட்டிய திருச்சி போலீசார்

பூண்டு வியாபாரியை பாராட்டிய திருச்சி போலீசார்

திருச்சி மாவட்டம் துறையூர் டவுன் பெரியார் நகரில் வசிக்கும் சின்னையா மனைவி கிருஷ்ணம்மாள் என்பவர் 08.06.2022 ம் தேதி துறையூர் வட்டாட்சியர்   அலுவலகத்திற்கு வரும்பொழுது துறையூர் பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணமாலின் பர்ஸ் கீழே விழுந்து விட்டதாகவும் மேற்படி பரிசில் சுமார் மூன்றரை பவுன் எடைகொண்ட தங்கச் செயின் இருந்ததாகவும் புகார் கொடுக்க வந்தார்.

இந்நிலையில் காவல் நிலையம் அருகே பூண்டு வியாபாரம் செய்யும் துறையூர் மாருதி நகர் மலையப்பன் சாலையைச் சேர்ந்த பரமசிவம் மகன் சுதாகர் என்பவர் அந்த வழியாக வரும் வரும்போது மணி பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்த பொழுது அதில் தங்கச் செயின் ஒரு ஏடிஎம் கார்டு இருந்துள்ளது. உடனே அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டிய சுதாகர் அவராகவே காவல் நிலையம் வந்து மேற்படி விஷயத்தை காவல் ஆய்வாளரிடம் தெரிவித்தார்.

உடனே காவல் ஆய்வாளர் சுதாகரன் நல்லெண்ணத்தை பாராட்டி அவருக்கு காவல் நிலையம் சார்பாக பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO