திருச்சியில் வெறி நாய் கடித்து சிறுமி பலத்த காயம் - பொதுமக்கள் அச்சம்

திருச்சியில் வெறி நாய் கடித்து சிறுமி பலத்த காயம் - பொதுமக்கள் அச்சம்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ஏவூர் ஊராட்சி, கோட்டூர் கிராமம் மேலத்தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் 7 வயது மகளை வெறிநாய் கடித்துள்ளது. இதில் கை, கால்கள் பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த சிறுமியை முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் காயங்கள் அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல் நேற்று வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் திரிவதாகவும், ஆடு, கோழி, மனிதர்களை துரத்தி கடித்து காயம் ஏற்படுத்துவதாகவும்  அப்பகுதி மக்கள்தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து இந்த வெறி நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகம் வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn