ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி கிடைக்க பெற்றன

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி கிடைக்க பெற்றன

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 28.07.2021 உண்டியல்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில்  திறக்கப்பட்டது.

பின்னர் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை உதவி ஆணையார்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன், மேலாளர் உமாமகேஸ்வரி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன்

திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்கள்   காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூபாய் 44,93,020 பணமும், 94 கிராம் தங்கம், 817 கிராம் வெள்ளி மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய் கரன்சிகளும் கிடைக்கப்பெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81