அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து - 5 பேர் காயம்

அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து - 5 பேர் காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்லுப்பட்டி அருகே உள்ள சாய்பாபா கோவில் அருகே நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்னால் நின்று கொண்டிருந்த இரும்பு பாரம் ஏற்றிய ஈச்சர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஐந்து பேர் காயமடைந்தனர். இதில் பேருந்தின் நடத்துனர் மற்றும் திருச்சியை சேர்ந்த இந்திராணி 47 என்ற பெண்மணி இருவரும் பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் சிறு காயத்துடன் அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.