கிரம்மர் சாண்டகிரண் பவுண்டேஷன் - ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கிரம்மர் சாண்டகிரண் பவுண்டேஷன் - ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கடந்த 1957ஆம் ஆண்டு பிஷப் ஜெ.சாண்டகிரன், ரெவரெண்ட் பால் சாண்டகிரன் ஆகிய சகோதரர்களால் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை (பதிவு எண் 5/57) என்ற சங்கம் நிறுவப்பட்டது. இவர்களுக்கு பின்னர் ரெவரெண்ட் A.தர்மராஜ் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் பட்டுக்கோட்டையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் A.தர்மராஜ் பதவிக்காலத்தில் 1983ம் ஆண்டு திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட பதிவாளர் மேற்பார்வையின் கீழ் இச்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

A.தர்மராஜ் மறைவை தொடர்ந்து கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் தலைவராக D.ஆபிரகாம் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் பல்வேறு இடங்களில் சபைகள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் தலைவர் A.தர்மராஜ் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி, கல்வி உதவித்தொகை, அன்னதானம் போன்ற திட்டங்களை ஆபிரகாம் தாஸ் செயல்படுத்தி வருகிறார். 

இந்தவகையில் இந்த ஆண்டில் முன்னாள் தலைவர் தர்மராஜ் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அருகே மலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் சார்பில் மலம்பட்டியில் செயல்படும் "இயேசு அற்புதம் செய்கிறார்" சபையில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தலைவர் ஆபிரகாம் தாஸ் இதில் கலந்துகொண்டு சிறப்பு ஜெபம் செய்தார். இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பணம் முடிப்பு, புடவைகளை தலைவர் ஆப்ரகாம் தாஸ் வழங்கினார்.

தொடர்ந்து ஏழை எளிய பெண்களுக்கு நிதி உதவி, ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் புரிவதற்காக பெண்களுக்கு தையல் மெஷின் மோட்டார் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிளை சபை துணை போதகர் ரூபனுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் செயலாளர் தாமஸ், துரை "இயேசு அற்புதம் செய்கிறார்" சபை போதகர் சாமுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision