திருச்சியில் நாளை மறுநாள் (02.01.2024) குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சியில் நாளை மறுநாள் (02.01.2024) குரூப்-4 மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை மறு நாள் ( 02.01.2024 செவ்வாய்க்கிழமை) மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கணிதம் பாட பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும். மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ- மாணவிகள் மாதிரி தேர்வில் கலந்து கொண்டுபயன் அடைய வேண்டும் என மாவட்ட மைய நூலகம் முதல் நிலை நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision