சர்வதேச அளவில் தடகள போட்டி - திருச்சி மாணவன் முதலிடம்

சர்வதேச அளவில் தடகள போட்டி - திருச்சி மாணவன் முதலிடம்

ஜம்மு காஷ்மீர், நேபாளத்தில் கடந்த 27, 28, 29 ஆகிய தேதியில் சர்வதேச அளவில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் முதல் 5 ஆயிரம் கி.மீ பிரிவு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த தடகள போட்டியில் திருச்சி தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் சமயபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஜெயசூர்யா (18)‌ என்பவர் 3 கி.மீ ஓட்டப்பந்தய பிரிவில் கலந்துகொண்டு ஓடினார். இதில் 9.29 நிமிடத்தில் பந்தய இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

இதனைத்தொடர்ந்து மாணவன் ஜெயசூர்யாவுக்கு பெற்றோர், கல்லூரி ஆசிரியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision