சென்னையில தான் கேட்டாங்க திருப்பி இம்போசிஷன் மாதிரி கேட்டா இது நியாயமா -  அமைச்சர் செய்தியாளரிடம் கேள்வி? 

சென்னையில தான் கேட்டாங்க திருப்பி இம்போசிஷன் மாதிரி கேட்டா இது நியாயமா -  அமைச்சர் செய்தியாளரிடம் கேள்வி? 

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்பொழுது ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரானது காவிரி ஆற்றில் 62 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் ஓடுகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் அச்சம் போக்கும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சியினை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நடத்தினர். இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இதில் திருச்சி தீ தடுப்பு மற்றும் மீட்பு குழுவினரும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் இணைந்து வெள்ளத்தில் அடித்து செல்வோரை எவ்வாறு காப்பாற்றலாம், மேலும் அவர்களுக்கு செய்யப்படும் முதல் உதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மேலும் இதில் பேரிடர் மேலாண்மை குழுவைச் சார்ந்த நீச்சல் தெரிந்த வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்வது போல் நடித்துக் காட்டினர். அவர்களை பேரிடர் மேலாண்மை மீட்பு  குழுவினர் அவர்களை மீட்டு வருவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேருவிடம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சென்னையில் மழைநீர் வடிகால் சரி செய்யப்பட்டு விட்டதா என்று செய்தியாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர்.... சென்னையில தான் கேட்டாங்க திருப்பி இம்போசிஷன் மாதிரி கேட்டா இது நியாயமா? சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இதனைத் தாண்டி பணிகள் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பணிகள் விரைந்து நடைபெறுகிறது. 

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கவனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதுகாத்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்த இடங்களில் 576 சாலைகள் போட வேண்டிய இடத்தில் 276 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளும் முடித்து விடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO