திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் காளியாவட்டம் மற்றும் குட்டிக்குடித்தல் திருவிழா

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் காளியாவட்டம் மற்றும் குட்டிக்குடித்தல் திருவிழா

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி குட்டிக்குடித்தல் திருவிழா நடைபெறுகிறது. காளியாவட்டம் நிகழ்ச்சி திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால்கரையில் உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு வந்த இந்த கோவில் திருச்சி நகர காவல் தெய்வமாக உள்ளது.

இக்கோவில் குட்டிக்குடித்தல் திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காளியா வட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வருவர். நாளை (புதன்கிழமை) சுத்த பூஜை நடக்கிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத் தில் தேரில் எழுந்தருள்வார், அம்மனின் அருள் பெற்ற மருளாளியை பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வருவர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்படும். மருளாளியை பக்தர்கள் ஊர்வலமாக தூக்கி கொண்டு வருவார்கள்.

அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆட்டு கிடா குட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்படும்.

மருளாளி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவார். மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடிப்பார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த் திக்கடனாக வழங்கிய ஆட்டுக்குட்டிகள் பலியிடப்படும். 10-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 11-ந் தேதி (சனிக்கிழமை) சாமி குடிபுகுதலும் நடைபெறும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn