திருச்சி மாணவிக்கு சிங்கப்பெண் விருது

திருச்சி மாணவிக்கு சிங்கப்பெண் விருது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல துறைகளில் சாதித்து, உயர்ந்து வரும் 120 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு 2024 ஆண்டுக்கான சிங்கப்பெண் விருதுகள் திறமைக்காக வழங்கப்பட்டது.

 இந்த விழா கடந்த மார்ச் 10 ஆம் தேதி புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஆச்சார்யா கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி சு.அ.யாழினிக்கு கலை மற்றும் இலக்கியப் பிரிவில் சிங்கப்பெண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கலை மற்றும் இலக்கியப் பிரிவில் சிங்கப்பெண் விருது பெற்றபள்ளி மாணவி சு.அ.யாழினியை பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision