2 நாட்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

2 நாட்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

அக்டோபர் 02.10.2021 காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19.10.2021 மிலாடி நபி ஆகிய தினங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் ( FL2 முதல் FL11 (FL-6 தவிர) வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn