மூவர்ணத்தில் ஒளிரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் கட்டிடங்கள்

மூவர்ணத்தில் ஒளிரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் கட்டிடங்கள்

நாட்டின் சுதந்திர  தின 75 ஆண்டு விழா கொண்டாட்டம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை  நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள

தேசிய தொழில்நுட்பக் கழகம் நுழைவாயில் மற்றும் கட்டிடங்களில் தேசிய கொடியில் உள்ள சிகப்பு, வெள்ளை, பச்சை ஆகிய வர்ணங்கள் உடைய விளக்குகளால் ஜொலிக்க வைக்கபட்டுள்ளன. 

திருச்சி என்ஐடியில் மின்விளக்குகளால் எரியும் தேசியக்கொடி கழுகு பார்வை காட்சியில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறது. தேசியக்கொடி வண்ணங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளதை பொதுமக்கள் இதன் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO