தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் அந்தநல்லுர் வட்டார கல்வித்துறையுடன் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மாணவ, மாணவியற்க்கான சாலை விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடபட்டது.

 அந்தநல்லுர் ஒன்றிய அனைத்து நடுநிலை பள்ளிகளின் இளையோர் செஞ்சிலுவை சங்க பள்ளி மாணவ மாணவியற்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்க்கு அந்தநல்லுர் ஒன்றிய வட்டாரகல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்ப்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அய்யாரப்பா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக கருத்துரை நிகழ்த்தி 

மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு பிரசுரங்களை வழங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) கு.மீனா நன்றியுரை ஆற்றினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision