திருச்சி மாவட்ட மக்களுக்கு புதிய எஸ்பி அறிவிப்பு

திருச்சி மாவட்ட மக்களுக்கு புதிய எஸ்பி அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுஜித் குமார் மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை, பொதுமக்கள் தொடர்பு கொள்ள பிரத்தியேக மொபைல் எண் வெளியீடுதிருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 9487464651 என்ற பிரத்தியேக மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision