அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கிவரும் பள்ளிக்கூடம் அச்சத்தில் பெற்றோர்கள்!

அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கிவரும் பள்ளிக்கூடம் அச்சத்தில் பெற்றோர்கள்!

தனியார் பள்ளிக்கூடத்தின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சார்ப் ஜீனியஸ் என்ற தனியார் பள்ளி அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு அமைப்புடைய கட்டிடத்தில் பள்ளி எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வருவதால், பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளதாகவும்,எனவே அப்பள்ளியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய கோரி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.