புதிய கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை

புதிய கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதனை பொதுமக்கள்  முறையாக கடைபிடிக்காத காரணத்தால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

இதில் கடைகள் அனைத்தையும் 10 மணிக்கு மூட வேண்டும், தரைகடைகளுக்கு அனுமதியில்லை  மற்றும் 10 மணிக்கு மேல் யாரும் வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த நிலையில், 10 மணிக்கு மேல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அறிவுரை கூறியும், கொரோனா விழிப்புணர்வு பற்றியும் எடுத்துக் கூறினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd