திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் அங்கு பணிபுரியும் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பொன்மலை ரயில்வே பணிமனை மூடப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், மேலதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உரிய விவரங்களை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gold | 4,885₹(1 gram) | 39,080.00₹(8 gram) |
Silver | 66.50₹(1 gram) | 66500.00₹(1 Kg) |
Feb 12, 2024 5545
Jan 27, 2024 1816
Sep 4, 2023 7517
Aug 2, 2023 20068