வன அலுவலர்களுக்கு இ- பைக் வழங்கும் நிகழ்ச்சி

வன அலுவலர்களுக்கு இ- பைக் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி வன மண்டல தலைமை வன பாதுகாவலர்  சதீஷ்  உத்தரவின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை , அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்களுக்கு முதற்கட்டமாக 20 இ- பைக் வழங்கினார்.

தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு நாற்றங்கால் உற்பத்தி , நடவு பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த TBGPCCR திட்டத்தின் கீழ் இந்த இ பைக் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சம்பத்குமார் மற்றும் சரவணகுமார் உதவி வன பாதுகாவலர் உடனிருந்தார்கள். நிகழ்ச்சியை கோபிநாத் வனச்சரக அலுவலர் ஏற்பாடு செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision