சந்திராயன் சாதனையை பாராட்டும் விதமாக பேரணி

சந்திராயன் சாதனையை பாராட்டும் விதமாக பேரணி

சந்திராயன் மூன்று செயற்கைக் கோளை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கிய விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டும் விதமாக வாழ்த்து திருச்சி தேசியக் கல்லூரியின் சார்பாக பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் பேரணியை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

தேசியக் கல்லூரி வளாகத்தில் இருந்து ரயில்வே நிலையம் வரை சென்ற பேரணியானது மீண்டும் தேசியக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. தேசிய மாணவர் படை மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்கள் சுழற்சங்க மாணவர்கள்  உள்ளிட்ட 500 மாணவ, மாணவிகள் இப்பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜ பேரணியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

துணை முதல்வர் முனைவர் இளவரசு மற்றும் பேராசிரியர்கள் பேரணியில் திரளாக பங்கேற்று விஞ்ஞானிகளின் சாதனைகளை போற்றினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision