இரட்டை கொலை சம்பந்தமாக தகவல் அளித்தால் சன்மானம் அறிவிப்பு

இரட்டை கொலை சம்பந்தமாக தகவல் அளித்தால் சன்மானம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகேவிவசாய நிலத்தில் உள்ள வீட்டில் பி.மேட்டூர் ஆசாரி தெருவை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகி யோர் கடந்த (02.07.2023) அன்று இரவு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை சம்பந்தமாகவும், கொலையாளிகள் சம்பந்த மாகவும் எவருக்கேனும் சிறு தகவல் தெரிந்தாலும் 9363668900 இந்த தொலைபேசி எண்ணுக்கு ரகசியமாக அல்லது வாட்ஸ்-அப் வாயிலாக தகவல் தெரிவிக்கவும். தகவல் கொடுப்பவர் பற்றியும், தெரிவிக்கும் தகவல் பற்றியும், ரகசியம் காக்கப்படும் என்றும்,

தகவல் கொடுப்பவருக்கு ரகசியமாக ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision