திருச்சி அருகே அரிவாளால் வெட்டி கொலை - மூவர் கைது.

திருச்சி  அருகே அரிவாளால் வெட்டி கொலை - மூவர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). இவரது குடும்பத்தினருக்கு, பெரியப்பா ராஜா குடும்பத்தினருடன் சொத்து பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விளைநிலத்தில் மின்மோட்டார் போடுவதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் பெரியப்பா மகன்களால் அரிவாளால் வெட்டியதில் முருகேசன் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் கருப்பையா (38), மாமனார் பிச்சை (50) ஆகியோர் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா சேர்வை மகன்களான பாலையா (37), செல்லதுரை (33) மற்றும் பொன்னுசாமி (எ)குஞ்சான்(32) ஆகியோரை புத்தாநத்தம் போலீஸார் வழக்கு பதிந்து நள்ளிரவில் கைது செய்தனர். இதில் பாலையா மற்றும் பொன்னுசாமி (எ) குஞ்சான் காயமடைந்ததையடுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision