லாரி உரிமையாளர் கொலை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி் உள்ளிட்ட 6 பேர் கைது

லாரி உரிமையாளர் கொலை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி் உள்ளிட்ட 6 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வரட்டு ஏரியில் உள்ள தண்ணீரில் மண்ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் லாரி உரிமையாளர் சதீஸ்குமார் (32) கடந்த 9 ம் தேதி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், லாரி உரிமையாளர் தாய் அம்சவள்ளி, மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி புல்லட் ராஜா உள்ளிட்ட 6 பேரை மண்ணச்சநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

லாரி உரிமையாளர் சதீஸ்குமார் மதுபோதைக்கு அடிமையாகி பணம் கேட்டு, அவரது தாய் அம்சவள்ளி யிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த தால் அம்சவள்ளியிடம் ரூ. 5 லட்சம் பேசி முன்பணமாக ரூ. 20 ஆயிரம் பெற்று கொண்டு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி புல்லட் ராஜா லாரி உரிமையாளரைக் கொலை செய்துள்ளது போலீஸ்  விசாரணையில் தெரியவந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn