வாரம் மூன்று நாட்களுக்கு 9 நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம் - அமைச்சர் தகவல்.

வாரம் மூன்று நாட்களுக்கு 9 நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம் - அமைச்சர் தகவல்.

பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நமது தமிழக அரசின் மூலம் ஏற்கப்பட்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் (24.02.2024) முதல் துவங்கப்பட்டு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு சுற்றுலா பேருந்து வரும் (07.03.2024) முதல் ஒவ்வொரு வியாழன் கிழமைகளிலும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 05:00 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம்,

இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 07:15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் பின்பு காலை உணவு இடைவேளை பின்பு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 09.00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம் பின்பு 10:00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், பிறகு காலை 11:00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம். காலை 11:30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 12:30 முதல் 1:30 வரை மதிய உணவு இடைவேளை, மதியம் 2:30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் மாலை 4:00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 04:45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம். மாலை 06:00 மணிக்கு புறப்பட்டு இரவு 08:00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளது. 

மேற்கண்டவாறு (07.03.2024) முதல் வாரம் தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழன்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. www.tnatc.in (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும்" முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியினை இணையத்தளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது. பயணிகள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision