ஸ்ரீரங்கம் கோவிலில் இணையவழியில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்புகள் தொடக்கம்!!

ஸ்ரீரங்கம் கோவிலில் இணையவழியில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்புகள் தொடக்கம்!!

இந்த சமய அறநிலையத் துறை சார்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவுரைப்படியும், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டது . 

Advertisement

முதல் நாள் அன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் விளக்கினார். முதல் வகுப்பில் தமிழ்நாடு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் செ.மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார்.