திருச்சி மாவட்டத்தில் இன்று 37 தேர்வு மையங்களில் டிஎன்பிசி குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும்குரூப் 1 மற்றும் 1A யில் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு இன்று (15. 06.2025 )ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்கள் ஆயிரத்து 100,42 நபர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். 37 தேர்வு மையம் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தது. வினாத்தாள் மற்றும் இடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 11 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் ஆயுதம் இயந்திய ஒரு காவலர் ஆகியோர் இருந்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 37 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை என்றும் முற்பகல் 9 மணிக்கு பின்னர்
தேர்வு கூடத்திற்குள் வரும் எந்த ஒரு தேர்வையும் தேர்வரையும் எக்காரணத்தை கொண்டும் தேர்வு கூட்டத்திற்குள் அனுமதிக்க இயலாது என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது
திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 37 தேர்வு மையங்களில் 10042 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.அதில் 7,452 பேர் தேர்வு எழுத இன்று வந்திருந்தனர். 2590 பேர் வரவில்லை 74.21சதவீதம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். 25.79 சதவீதம் பேர் விண்ணப்பித்திருந்தும் தேர்வு எழுத வரவில்லை.