தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கிய 44 வது வார்டு கவுன்சிலர்

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கிய 44 வது வார்டு கவுன்சிலர்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொது சேவையில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பல்வேறு தரப்பினர் கவுரவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் 44-A வார்டு மாமன்ற உறுப்பினர் A.பியூலா மாணிக்கம் தேவதாஸ், வார்டுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் இந்த தீபாவளியை சிறப்பான முறையில் கொண்டாடுமாறு வாழ்த்தி அனுப்பினார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO