ரூபாய் 4.27 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ரூபாய் 4.27 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் ரூபாய் 4.27 கோடி மதிப்பீட்டில் 6-வது மானிய சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பூவாளூர் சாலையில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

புதிய நகராட்சி நிர்வாக கட்டிடம் அடைக்கலாட்டப்பட்ட இடத்திற்கு அருகே லால்குடி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் மற்றும் புதிய என் ஐ டி கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision