மாஸ்க் கட்டாயம் அணியாதவர்களுக்கு அபாரதம் -ஆணையர் அதிரடி

மாஸ்க் கட்டாயம் அணியாதவர்களுக்கு அபாரதம் -ஆணையர் அதிரடி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, எனவே, பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கடை வீதிகள் மற்றும் மார்க்கெட்கள், போன்ற பொது இடங்களில் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக வளாகங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளதை சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் உரிமையாளர்கள் உறுதி செய்யுமாறும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO