முக்கொம்பு சுற்றுலா தளத்தில் நீண்ட நாட்களாக ஓடாமல் நின்ற ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

முக்கொம்பு சுற்றுலா தளத்தில் நீண்ட நாட்களாக ஓடாமல் நின்ற ரயில் சேவை மீண்டும்  தொடக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

திருச்சியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது முக்கொம்பு சுற்றுலா தலமாகும். இங்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை புரிந்து வருகின்றனர்.

Advertisement

முக்கொம்பு சுற்றுலா தளம் மற்றும் அங்குள்ள பூங்காவில் சிறுவர் சிறுமியர் ராட்டினங்கள் மற்றும் ஊஞ்சல் ஆடி மகிழ்வர். இந்நிலையில் முக்கொம்பு சுற்றுலா தளத்தில் உள்ள பூங்கா ரயில் சேவை நீண்ட நாட்களாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

தற்போது ரயில் சேவை செய்ய பணிகள் முடிந்து முக்கொம்பு சுற்றுலா தளத்தில் மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்