திருச்சியில் 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

திருச்சியில் 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Advertisement

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள (சாரநாதன் இஞ்சினியரிங்) தனியார் கல்லூரியில்
சட்டமன்ற தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இன்று (27-1-21) முதல் (30-1-21) வரை தொடர்ந்து நான்கு நாட்கள் காலை 9.30மணி முதல் மாலை 5.00வரை தென்மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டங்கள் உள்ளிட்ட இருபது மாவட்டங்களை சார்ந்த 118-தேர்தல் நடத்தும்  அலுவலர்கள் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய போது நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்திலுள்ள 20 மாவட்டத்தை சேர்ந்த 118 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு தேசிய அளவிலான பயிற்சி பெற்ற வல்லுநர்கள் எட்டு பேர் பயிற்சி அளிக்கிறார்கள்.மீதம் உள்ள மாவட்டங்களுக்கு சென்னையில் பயிற்சி கொடுக்கபடுகிறது.

Advertisement

இறுதி நாளன்று தலைமை தேர்தல் அதிகாரி இவர்களுக்கு சான்றிதழ் வழங்குவார். இப்பயிற்சியில் தேர்தல் எப்படி நடத்துவது ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாளுவது, வாக்குப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் இம் முகாமில் பயிற்சி கொடுக்கப்படுகிறது என்றார்.