6 மாவட்ட வழக்கறிஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி

6 மாவட்ட வழக்கறிஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி

தமிழகத்தில் மே மாதம் 7ஆம் தேதி அரசு கூடுதல் வழக்கறிஞர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்ற அரங்கில் போட்டித் தேர்வில் பங்கேற்கும் வழக்கறிஞர்களுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

இப்பயிற்சியை திருச்சி மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் வரவேற்று உரையாற்றினார். இப்பயிற்சியில் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் சேலம் மதுரை மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் இதற்கான எழுத்துத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று ஓய்வுபெற்ற நீதிபதி பூபாலன் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் மூத்த வழக்கறிஞர் சிவசிவ பால்ராஜ் குற்றவியல் வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் ஜானகிராமன் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO