திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 20 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அந்நிலையை ஒத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக இருந்த பாலமுரளி, திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn