திருச்சி கனவு மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு - அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி கனவு மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு - அமைச்சர் நேரு பேட்டி

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள "தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை "நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் முக்கிய பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்..... 20 மாத காலம் அரசு சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் மட்டும் செயல்பாடுகள் குறித்து விளக்க கண்காட்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைய நிதி வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் நேற்று பிரதமரிடம் வலியுறுத்தியதை பார்த்து இருப்பீர்கள். ஆளுநருடைய பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாக பதில் அளித்து விட்டார்.

அதைப்பற்றி நான் ஏதும் கூற முடியாது. ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்துவிட்டார். ஜங்ஷன் மேம்பாலம் அடுத்த வாரம் துவக்கி வைக்க உள்ளோம். டி.பி.ஆர்க்காக காத்து கொண்டுள்ளோம். பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் வே சாலைக்கு, திருச்சிக்கு டைட்ல் பார்க் முதல்வர் அறிவித்துள்ளோர். மாநகராட்சிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை உடனடியாக அதற்கு கொடுக்க உள்ளோம்.

டைட்ல் பார்க்க போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளாதால், திருவெறும்பூர் - அசூர் வரை அரை அடி கூட வாங்க முடியாத அளவிற்கு அந்த பகுதி டெவலப் ஆக உள்ளது. வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய ஹப்பாக மாற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn