திருச்சி பிரபல ஜவுளி கடை உணவகத்தில் எலி புழுக்க பர்கர் - குழந்தை சாப்பிட்டதால் தந்தை பதட்டம்

திருச்சி பிரபல ஜவுளி கடை உணவகத்தில் எலி புழுக்க பர்கர் - குழந்தை சாப்பிட்டதால் தந்தை பதட்டம்

திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை (சென்னை சில்க்ஸ்) மாடியில் அவர்களது உணவகம் உள்ளது. அதில் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் தனது குழந்தையுடன் அந்த உணவகத்தில் பர்கர் சாப்பிட்டு உள்ளார்.

தன் குழந்தை சாப்பிட்ட பர்கரில் எலியின் எச்சம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உணவகத்தில் பணிபுரிபவர்களிடம் கூறிய பொழுது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சாப்பிட்டதற்கு பில் தொகையும் வாங்கியுள்ளனர். இதனால் வாடிக்கையாளருக்கும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குழந்தை சாப்பிட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். வாக்குவாதத்திற்க்கு பின்பு உணவகத்தில் புகார் செய்ய முற்பட்ட பொழுது அதற்காக புகார் புத்தகத்தில் எழுதி வைக்குமாறு குறிப்பிட்டனர். அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை புகாரை மட்டும் இவர் எழுதி வைத்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.