திருச்சி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - தற்கொலை முயற்சி

திருச்சி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - தற்கொலை முயற்சி

திருச்சி மாநகரம் டிவிஎஸ் டோல்கேட் விவகா நகர் பகுதியில் வசித்து வருபவர் சூர்யா இவர் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் கடந்த 5 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவருக்கும், இரயில்வேயில் பணியாற்றும் இவரது உறவினரான லால்குடி பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக இவர்கள் இந்த கள்ளத்தொடர்பில் இருந்து வந்த நிலையில் ஸ்டாலின் பலமுறை சூர்யாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் அவர் சூர்யா நிர்வாணமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு 20 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO