வானவேடிக்கையை பைக்கில் வைத்து வெடித்த திருச்சி இளைஞர்கள்

வானவேடிக்கையை பைக்கில் வைத்து வெடித்த திருச்சி இளைஞர்கள்

திருச்சியில் புறநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீலிங் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வான வேடிக்கைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வெடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒரு இளைஞர் வானவேடிக்கையை இருசக்கர வாகனத்தின் முன் கட்டி அதனை கொளுத்தியவுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இந்த வான வேடிக்கைகள் வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை அவர்களே படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 மேலும் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதனை சுழற்றி சுழற்றி வெடிக்க கூடிய காட்சியும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே காவல்துறை வீலிங் செய்யக்கூடாது என கடுமையான உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுத்து உள்ள நிலையில் தற்போது தீபாவளி அன்று இளைஞர்கள் இந்த ஆபத்தான முறையில் வான வேடிக்கை பட்டாசுகளை வைத்து வெடித்துள்ளதால் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த(09.11.2023) ஒன்பதாம் தேதி சமயபுரம் அருகே உள்ள புறநகர் சாலையில் திருச்சி உயர் கொண்டான் வாய்க்கால் கரை ஓரமாக உள்ள கள்ளாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் ,தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் இருவரும் பைக் வீலிங் செய்துள்ளனர். பைக்கில் வானவேடிக்கை கட்டியது அஜய் என திருச்சி மாநகர போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது இன்னும் சிறிது நேரத்தில் சட்டப்பிரிவு 279 கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளனர். வாகனத்தை (அதிவேகமாக இயக்கியது தொடர்பாக) தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனை பிடித்து திருச்சி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision