காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது டூவீலர், செல்போன்கள் பறிமுதல்

காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது டூவீலர், செல்போன்கள் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் எந்த நேரமும் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது உடைமையில் சிறுசிறு பாக்கெட்டுகளாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிலிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (25) மற்றும் சுரேஷ் ராஜா (20) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கஞ்சாவின் எடை 700 கிராம் ஆகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO