லால்குடி வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தில் தீ விபத்து

லால்குடி வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தில் தீ விபத்து

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றியைச் சேர்ந்தவர் (68). இவர் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது சொந்த வேலைக்காக  இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில்

நிலைய அலுவலர் போக்குவரத்து சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர் பிரபு மற்றும் வீரர்கள் சுரேஷ் அருண்பாண்டியன், விஜய் அமிர்தராஜ், விஜய் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த  தீயை அணைத்தனர். பின்னர் தீ விபத்து குறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn