ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி விழா - பகல் பத்து 3ம் நாள்

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த  ஏகாதசி விழா - பகல் பத்து 3ம் நாள்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா (13.12.2023) அன்று தொடங்கியது. பகல் பத்து மூன்றாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் கல் இழைத்த நீண்ட நேர் கிரீடம் அணிந்து, வைரக் கல் அபய ஹஸ்தம், மகர கர்ண பத்திரம், நாச்சியார் திருமொழி'க்கு ஏற்ப தாயார் பதக்கம், சிகப்புக்கல் தாமரை பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை,

சந்திரகலை , காசு மாலை, இரட்டை வட முத்துமாலை, அடுக்கு பதக்கங்கள் அணிந்து, சிகப்பு கல் திருவடி சாற்றி, பின் சேவையாக - புஜ கீர்த்தி, பருத்தி பூ பதக்கம் அணிந்து, பச்சை பட்டு உடுத்தி சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision