திருச்சி மாநகராட்சியின் புதிய இளம் வயது ஐ.ஏ.எஸ் ஆணையர் சுவராஸ்ய தகவல்

திருச்சி  மாநகராட்சியின் புதிய இளம் வயது ஐ.ஏ.எஸ் ஆணையர் சுவராஸ்ய தகவல்

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக ஆர்.வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் பொறுப்யேற்க உள்ளளார்.இவர் புதுச்சேரி மதுக்கரையைச் சேர்ந்தவர்.தந்தை கடலூரில் வழக்கறிஞர்.திருவண்ணாமலை எஸ்பி பொன்னியின் இளைய சகோதரர் ஆவார்.தன் சகோதரியை முன்னுதாரணமாக கொண்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார்.

யுபிஎஸ்சி தேர்வில் இந்தியாவிலேயே 37வது இடமும் தமிழக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்.37 வயதான இவர் கடலூரில் உள்ள பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். யுபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை நேர்க்காணல் வரை சென்றுள்ளார். தொடர்முயற்சியால் தேர்வில் வெற்றியும் பெற்றார்.

தற்போது தர்மபுரியில் திட்டஇயக்குநராக திட்ட இயக்குநராக பணிபுரிகிறார்.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையராக ஓரிரு நாட்களில் பொறுப்யேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO